Jan 21, 2012

சண்முக கவசம்


சண்முக கவசம்


ஓம் குமர குருதாச குருப்யோ நம:
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம்.


அண்டமா யவனி யாகி யறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற வென்னரு ளீச னான
திண்டிறற் சரவ ணத்தான்றினமுமென் சிரசைக் காக்க

ஆதியாங் கயிலைச் செல்வ னணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் றானிரு நுதலைக் காக்க
சோதியாந் தணிகை யீசன் றுரிசிலா விழியைக் காக்க
நாதனாங் கார்த்தி கேய னாசியை நயந்து காக்க.

இருசெவி களையுஞ் செவ்வே ளியல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பன் முழுதுநற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க.

ஈசனாம் வாகு லேய னெனதுகந் தரத்தைக் காக்க
தேசுறு îதாள்வி லாவுந் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை யீரா றாயுதன் காக்க வென்றன்
ஏசிலா முழுங்கை தன்னை யெழிற்குறிஞ் சிக்கோன் காக்க.

உறுதியாய் முன்கை தன்னை யுமையிள மதலை காக்க
தறுகணே றிடவே யென்கைத் தலத்தைமா முருகன் காக்க
புறங்கையை யயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமான் மருகன் காக்க பின்முது கைச் சேய் காக்க.

ஊணிறை வயிற்றை மஞ்ஞை யூர்தியோன் காக்க வம்புத்
தோணிமிர் சுரேச னுந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ
ஆணியைக் கந்தன் காக்க வறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க
அஞ்சக னமொரி ரண்டு மரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சர ணேச வாசான் றிமிருமுன் றொடையைக் காக்க.

ஏரகத் தேவ னென்றா ளிருமுழங் காலுங் காக்க
சீருடைக் கணைக்கா றன்னைச் சீரலை வாய்த்தே காக்க
நேருடைப் பரடி ரண்டு நிகழ் பரங் கிரியன் காக்க
சீரிய குதிக்கா றன்னைத் திருச்சோலை மலையன் காக்க.

ஐயுறு மலையன் பாதத் தமர் விரலுங் காக்க
பையுறு பழநி நாத பரனகங் காலைக் காக்க
மெய்யுடன் முழுது மாதி விமலசண் முகவன் காக்க
தெய்வநா யகவி சாகன் றினமுமென் னெஞ்சைக் காக்க.

ஒலியெழ வுரத்த சத்தத் தொடுவரு பூதப் ரேதம்
பலிகொளி ராக்க தப்பேய் பலகணத் தெவையா னாலுங்
கிலிகொள வெனைவேல் காக்க கெடுபரர் செய்யுஞ் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடா தயில்வேல் காக்க.

ஓங்கிய சீற்ற மேகொண் டுவனிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்ட மெஃகந் தடிபர சீட்டி யாதி
பாங்குடை யாயு தங்கள் பகைவரென் மேலே யோச்சின்
தீங்குசெய் யாம லென்னைத் திருக்கைவேல் காக்க காக்க.

ஒளவிய முளரூ னுண்போ ரசடர்பே யரக்கர் புல்லர்
தெவ்வர்க கௌவரா னுèலுந் திடமுட னெனைமற் கட்டத்
தவ்வியே வருவாராயிற் சராசர மெலாம்பு ரக்குங்
கவ்வுடைச் சூர சண்டன கையயில் காக்க காக்க.

கடுவிடப் பாந்தள் சிங்கங் கரடிநாய் புலிமா யானை
கொடியகோ ணாய்கு ரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை யெதனா லேனு நானிடர்ப் பட்டி டாமற்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க.

ஙகரமே போற்ற ழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதே ணண்டுக் காலி செய்யனே றாலப் பல்லி
நகமுடை யோந்தி பூரா னளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை யிவையா வெற்கோ ரூறிலா தைவேல் காக்க.

சலத்திலுய் வன்மீ னேறு தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலுஞ் சலத்தி லுந்தா னெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினா னான்வ ருத்தங் கொண்டிடா தவ்வவ் வேளை
பலத்துட னிருந்து காக்க பாவனி கூர்வேல் காக்க.

ஞமலியம் பரியன் கைவே னவக்கிர சுக்கோள் காக்க
சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம்
திமிர்கழல் வாதஞ் சோகை சிரமடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன் னிருபுயன் சயவேல் காக்க.

டமருகத் தடிபோ னைக்குத் தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மங் குடல்வலி யீழை காசம்
நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப்பிர மேக மெல்லாம்
எமையடை யாம லேகுன் றெறிந்தவன் கைவேல் காக்க.

இணக்கமில் லாத பித்த வெரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்குங் குஷ்ட மூலவெண் முளைதீ மந்தஞ்
சணத்திலே கொல்லுஞ் சன்னி சாலமென் றறையு மிந்தப்
பிணிக்குல மெனையா ளாமற் பெருஞ்சத்தி வடிவேல் காக்க.

தவனமா ரோகம் வாதஞ் சயித்திய மரோச கம்மெய்
சுவறவே செய்யு மூலச் சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோயண்டவா தங்கள் சூலை
எவையுமென் னிடத்தெய் தாம லெம்பிரான் றிணிவேல் காக்க.

நமைப்புறு கிரந்தி வீக்க நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை யாகுபஃ றொழுநோய் கக்கல்
இமைக்குமுன் னுறுவ லிப்போ டெழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனு மென்னை யெய்தாம லருள்வேல் காக்க.

பல்லது கடித்து மீசை படபடென் றேது டிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சக் காட்டியே யுருட்டி நோக்கி
எல்லினங் கரிய மேனி யெமபடர் வரினு மென்னை
ஒல்லையிற் றார காரி ஓம்ஐம் ரீம்வேல் காக்க.

மண்ணிலு மரத்தின் மீது மலையிலு நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதுஞ் சாரிசெய்யூர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த விடத்து மென்னை
நண்ணிவந் தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க.

யகரமே போற்சூ லேந்து நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலா மீரா றம்பகன் வேல்பின் காக்க
சகரமோ டாறு மானோன் தன்கைவே னடுவிற் காக்க
சிகரமின் றேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க

ரஞ்சித மொழிதே வானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கிற் றிடமுடன் காக்க வங்கி
விஞ்சிடு தினையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்îதா னிகலுடைக் கரவேல் காக்க.

லகரமே போற்கா ளிங்க னல்லுட னௌ¨ய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
றிகழெனை நிருதி திக்கி னிலைபெறக் காக்க மேற்கில்
இகலயில் காக்க வாயு வினிற்குகன் கதிர்வேல் காக்க.

வடதிடை தன்னி லீசன் மகனருட் டிருவேல் காக்க
விடையுடை யீசன் றிக்கில் வேதபோ தகன்வேல் காக்க
நடக்கையி லிருக்கு ஞான்று நவில்கையி னிமிர்கை யிற்கீழ்க்
கிடக்கையிற் றூங்கு ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க.

இழந்துபோ காத வாழ்வை யீயுமுத் தையனார் கைவேல்
வழங்குநல் லூணுண் போது மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்துநெஞ் சடக்கம் போதுஞ்
செழுங்குணத் îதாடே காக்க திடமுடன் மயிலுங் காக்க.

இளமையில் வாலி பத்தி லேறிடு வயோதி கத்தில்
வளரறு முகச்சி வன்றான் வந்தெனைக் காக்க காக்க
ஒளியெழு காலை முன்னே லோஞ்சிவ சாமி காக்க
தௌ¨நடு பிற்ப கற்கால் சிவகுருநாதன் காக்க.

இறகுடைக் கோழித் îதாகைக் கிறைமுனி ராவிற் காக்க
திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பினி ராவிற் காக்க
நறவிசேர் தாட்சி லம்ப னடுநிசி தன்னிற் காக்க
மறைதொழு குழக னெங்கோன் மாறாது காக்க காக்க.

இனமெனத் தொண்ட ரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க
தனிமையிற் கூட்டந் தன்னிற் சரவண பவனார் காக்க
நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுடான் காக்க வந்தே.

சங்கடம் தரும் வழக்கு, சதிகாரர்களின் சழக்கு, வழிச்செலவில் வரும் ஆபத்து இவை களிலிருந்து நமைக் காக்க - சண்முக கவசம் பாராயாணம் செய்து பயன்பெறுவீர் பக்தர்களே!

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்கள்



குமாரஸ்தவம்

ஓம் குமர குருதாச குருப்யோ நம : பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்

ஓம் ஷண்மத பதேயே நமோ நம
ஓம் ஷட்க்ரீவ பதேயே நமோ நம
ஓம் ஷட்கிரீட பதேயே நமோ நம
ஓம் ஷட்கோண பதேயே நமோ நம
ஓம் ஷட்கோச பதேயே நமோ நம
ஓம் நவநிதி பதேயே நமோ நம
ஓம் சுபநிதி பதேயே நமோ நம
ஓம் நரபதி பதேயே நமோ நம
ஓம் சுரபதி பதேயே நமோ நம
ஓம் நடச்சிவ பதேயே நமோ நம
ஓம் ஷடக்ஷர பதேயே நமோ நம
ஓம் கவிராஜ பதேயே நமோ நம
ஓம் தபராஜ பதேயே நமோ நம
ஓம் இஉறபர பதேயே நமோ நம
ஓம் புகழ்முநி பதேயே நமோ நம
ஓம் ஜயஜய பதேயே நமோ நம
ஓம் நயநய பதேயே நமோ நம
ஓம் மஞ்சுள பதேயே நமோ நம
ஓம் குஞ்சரி பதேயே நமோ நம
ஓம் வல்லீ பதேயே நமோ நம
ஓம் மல்ல பதேயே நமோ நம
ஓம் அஸ்த்ர பதேயே நமோ நம
ஓம் சஸ்த்ர பதேயே நமோ நம
ஓம் ஷஷ்டி பதேயே நமோ நம
ஓம் இஷ்டி பதேயே நமோ நம
ஓம் அபேத பதேயே நமோ நம
ஓம் சுபோத பதேயே நமோ நம
ஓம் வியூஉற பதேயே நமோ நம
ஓம் மயூர பதேயே நமோ நம
ஓம் பூத பதேயே நமோ நம
ஓம் வேத பதேயே நமோ நம
ஓம் புராண பதேயே நமோ நம
ஓம் பிராண பதேயே நமோ நம
ஓம் பக்த பதேயே நமோ நம
ஓம் முக்த பதேயே நமோ நம
ஓம் அகார பதேயே நமோ நம
ஓம் உகார பதேயே நமோ நம
ஓம் மகார பதேயே நமோ நம
ஓம் விகாச பதேயே நமோ நம
ஓம் ஆதி பதேயே நமோ நம
ஓம் பூதி பதேயே நமோ நம
ஓம் அமார பதேயே நமோ நம
ஓம் குமார பதேயே நமோ நம 

துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபடக் குமாரஸ்தவம் பாராயாணம் செய்து பயன்பெறுவீர் பக்தர்களே! 

முருகன் பக்தி பாடல்கள்






ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார் வினைகள் தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகத் தெய்வம்
வேறுபடை தேவையற்ற வேலவனாம் தெய்வம்
யாருமற்ற அடியவரை ஆட்கொள்ளும் தெய்வம்
கூறும் வேதத்து உட்பொருளாய் குளிர்ந்து
நின்ற தெய்வம்.


எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.

ஆடும் பரிவேல் அணிசேவல் என
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.


எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என்மீது மனமகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள்செய்.


முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே- ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.


வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே! "செந்திநகர்ச்
சேவகா' என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை.


கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்
என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்
விரித்தோனைவிளங்கு வள்ளிகாந்தனைக்
கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!


விழிக்குத் துணை மென்மலர்ப் பாதங்கள்
மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா
என்னும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

சிந்தாமணியே திருமால் மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகநோக்கி வரம்
தந்தாய் முருகா தணிகா சலனே.


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

முருகன் துதி


முருகன் துதி 


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!








உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!